Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோட்டில் போக மாட்டேன்! சென்டர் மீடியனில் டிவிஎஸ் 50ஐ ஓட்டிய இளைஞர்..திருச்சியில் பதறிய வாகன ஓட்டிகள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் முத்தரையர் சதய விழாவின் போது சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் மேலே டிவிஎஸ் 50 பைக்கை இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஓட்டிச்செல்லும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

பெரும்பிடுகு முத்தரையர் 1,349ஆவது சதய திருவிழா கடந்த 23 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. சதய திருவிழாவை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரசியல் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Mutharaiyar Sadaya Festival Youth Rides TVS 50 Bike In Center Median

போலீசாரிடம் வாக்குவாதம்: இந்த விழாவுக்காகத் திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டூ வீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இளைஞர்கள் பலரும் பைக்கில் ஊர்வலமாக வந்தனர்.

அப்போது பட்டாசுகளை வெடித்தும், கொடிகளை அசைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ஒரு சிலர் சாலையை மறித்து பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இதை தடுக்க முயன்ற போலீசாரிடம் வாக்குவாதத்திலும் சில இளைஞர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

விசாரணை வேண்டும்: இந்த நிலையில், இன்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், டிவிஎஸ் 50 பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், திருச்சி மேம்பாலத்தில் உள்ள சென்டர் மீடியன் மேலே பைக்கை ஓட்டிச்செல்கிறார். சாகசம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் பைக்கை இளைஞர் ஓட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ காட்சிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் போக்குவரத்து போலீசாரை டேக் செய்து வருகிறார்கள்.

திருச்சியில் சிலை: கி.பி. 705 முதல் 745 வரை தஞ்சையை ஆட்சி செய்த அரசர் தான் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்.. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்று அறியப்படும் இவர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய பகுதிகளை ஆண்ட தலைசிறந்த மன்னராவர்.

துணிச்சலான தமிழ் மன்னர்களில் ஒருவரான இவர் பல இடங்களைப் போரிட்டு வென்றுள்ளார்.. இவருக்கு 1996இல் தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திருச்சியில் சிலை ஒன்றை நிறுவினார்..

மாலை அணிவித்து மரியாதை:
அதைத் தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 1,349ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது அதிகாரிகளும் உடன் இருந்தனர். அதைத் தொடர்ந்து முத்தரையர் சங்கத்தினர் மற்றும் அதிமுக, திமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பிலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பெரும்பிடுது முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+