திருச்சியில் பணிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயம் - கடத்தி சென்றனரா? காவல்துறை தீவிர விசாரணை
திருச்சி : திருச்சியில் பணிக்கு நர்சிங் மாணவி மாயமானார். அவரை யாரும் கடத்தி சென்றனரா? என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அடுத்துள்ள கீழ சிந்தாமணி கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேலு - சாந்தி தம்பதியரின் இரண்டாவது மகள் துர்காதேவி(18). இவர் நர்சிங் முடித்துவிட்டு திருச்சி உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பணிக்குச் சென்றவர். பணி முடிந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த துர்காதேவியின் பெற்றோர்கள் அவர்களது.
உறவினர்கள் மற்றும் துர்கா தேவியின் தோழிகளின் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்காததால், இது குறித்து பெற்றோர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மூன்று நாட்களுக்கு முன்பு பணியில் இருந்து புறப்பட்ட துர்கா தேவி மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது தெரிய வந்தது. அவர் எங்கு சென்றார். அல்லது யாரேனும் கடத்திச் சென்றனரா? என்பது குறித்து தனிப்படை காவல்துறையினர் மேற்கொண்டு மாயமான துர்கா தேவியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications