போலியான முகவரி கொடுத்து தப்பும் மக்கள்.. இனி கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்
திருச்சி: போலியான முகவரியை கொடுத்து பலர் குழப்பத்தை ஏற்படுத்துவதால், இனி கொரோனா பரிசோதனைக்கு செல்வோர் ஆதார் அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது தான் ஒரே வழி என்று அரசு தீவிரம் காட்டி வருகிறது. தினமும் தமிழகத்தில் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செயயப்படுகிறது. நாள்தோறும் சுமார் 3900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

தமிழத்தில் சென்னைக்கு அடுத்தபபடியாக வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் அதிகம் வந்து இறங்குவது திருச்சியில் தான். இங்கு இதுவரை 25,000 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்கு முகவரிகள், தொலைபேசி எண்களைப் பெற்றுக் கொண்டு, பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானதும் தகவல் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா அறிகுறியோடு சளி மாதிரி சோதனைக்கு வரும் சிலர் தொடர் சிகிச்சை, தனிமைப்படுத்தலுக்கு பயந்து போலியான முகவரிகளை கொடுத்துவிட்டு தப்பி விடுகிறார்கள். போலியான முகவரி, செல்போன் எண் கொடுத்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்களை திருச்சி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் பரிசோதனைக்கு வரும் நபரின் ஆதார் அட்டை எண் மற்றும் நகல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருச்சியில் தற்போது 350-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினமும் ஏராளமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications