திருச்சி: முகநூல் மூலம் ஆபாச பேச்சு.. இளம்பெண் மூலம் கொக்கி போட்டு பணம் பறிக்கும் கும்பல் கைது
திருச்சி: முகநூல் மூலம் ஆபாசமாக பேச வைத்து வாலிபரை கடத்தி சித்ரவதை செய்த வழக்கில் இளம்பெண்ணின் வருங்கால கணவர் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் (31). முகநூல் மூலம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருச்சி காஜாமலையை சேர்ந்த நசீர் அகமது என்பவரின் மகள் ரகமத்நிஷா (20) என்ற பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
ரகமத் நிஷாவுக்கும், காஜாமலையை சேர்ந்த அன்சாரி ராஜா (22) என்ற வாலிபருக்கும் கடந்த 3-ஆம் தேதி திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. அன்சாரி ராஜா, டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு, ரகமத்நிஷா மற்றும் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து முகநூல் மூலம் நட்பாக பழகி பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டு வந்தார்.

மோட்டார் சைக்கிள்
அதன்படி ரகமத்நிஷா, கடலூரை சேர்ந்த வினோத்குமாருக்கு ஆசை வார்த்தைகளையும், ஆபாசமான வார்த்தைகளையும் முகநூலில் பதிவிட்டு தனது வலையில் விழச் செய்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி ரகமத்நிஷாவை சந்திக்கும் ஆசையில் வினோத்குமார் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி வந்தார்.

கீழ்படையாச்சி
திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானம் இருக்கும் இடத்திற்கு அவர் வந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்தி சென்று ரூ.1 லட்சம் கேட்டு சித்ரவதை செய்து, அவரது மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து ரகமத்நிஷா, கூட்டாளிகள் ஆசீக் என்ற நிவாஷ் (26) மற்றும் திருச்சி பாலக்கரை கீழபடையாச்சி தெருவை சேர்ந்த முகமது யாசர் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தனிப்படை போலீஸ்
மேலும் தலைமறைவான ரகமத்நிஷாவின் வருங்கால கணவரான அன்சாரி ராஜா உள்ளிட்ட 5 பேரை பிடிக்க இன்ஸ்பெக்டர் நிக்சன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தி, 5 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அன்சாரி ராஜா மற்றும் காஜாமலை பி.வி.எஸ். நகரை சேர்ந்த காஜாமைதீன் மகன் அன்சாரி பிலால் (20) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

போலீஸார்
கைதானவர்களில் அன்சாரி பிலால், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கைதான 2 பேரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications