“எங்களை நோக்கி அதிகாரம் வரும்; எங்களை நோக்கி நாற்காலிகள் வரும்”.. திருச்சியில் திருமாவளவன் சூளுரை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: "எங்களை நோக்கி அதிகாரம் வரும்; எங்களை நோக்கி நாற்காலிகள் வரும். எங்களை ஓரங்கட்ட பார்த்தாலும், ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை நிறுவுவோம்" என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பேசியுள்ளார்.

திருச்சியில் இன்று நடைபெற்று வரும் மதச்சார்பின்மை காப்போம் பேரணியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி உரையாற்றினார்.

Power Will Gravitate Towards Us Thirumavalavan Asserts VCK s Role

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பேரணி நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் தொடங்கி, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதனையொட்டி, வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளும், பிரம்மாண்ட பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தப் பேரணியைத் தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி உரையாற்றினார்.

திருமாவளவன் பேசுகையில், "தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். இந்திய தேசிய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.

எங்களை நோக்கி அதிகாரம் வரும்; எங்களை நோக்கி நாற்காலிகள் வரும். எங்களை ஓரங்கட்ட பார்த்தாலும், ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை நிறுவுவோம்." எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+