கர்ப்பிணி மனைவி கழுத்தை அறுத்த கணவன்.. தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டதால் பரபரப்பு.. திருச்சியில்!
கர்ப்பிணி மனைவி கழுத்தை அறுத்துள்ளார் கணவன்
Recommended Video

திருச்சி: கர்ப்பிணி என்றும் பாராமல், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தை சேர்ந்தவர் கமல்காந்த்.. 33 வயதாகிறது.. இவரது மனைவி ஜீவிதா.. 26 வயதாகிறது.

இருவருக்கும் கடந்த வருடம் கல்யாணம் ஆனது.. இப்போது ஜீவிதா கர்ப்பமாக இருக்கிறார். கமல்காந்த் என்ஜினியராக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.. இப்போது வந்த நிலையில் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் உள்ளார் .
இந்நிலையில் கணவன் - மனைவி இடையே வீட்டில் தகராறு எழுந்துள்ளது.. அவர்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகமானதாகவும் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கமல்காந்த் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்துவந்து மனைவி கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார் .
மேலும் தனது கையையும் அதே கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.. ரத்தம் சொட்ட சொட்ட மாடியிலிருந்து மகன் கீழே இறங்கி வந்ததை பார்த்த தாய் அலறி சத்தம் போட்டார்.. இந்த அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
மருமகள் கொலை, மகன் படுகாயத்துடன் இருப்பதை கண்டு அலறி அடித்த அவர்கள் உடனடியாக முசிறி ஸ்டேஷனில் புகார் தந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜீவிதாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கமல்காந்த் முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணி மனைவியை கணவனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications