ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர் சாமி தரிசனம்! பூரண கும்ப மரியாதையுடன் அர்ச்சகர்கள் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பூரண கும்ப மரியாதையுடன் குடியரசு தலைவருக்கு அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலை 10வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமளித்தார்.

President Droupadi Murmu Srirangam

பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு மாலை 4.30 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்கிய குடியரசுத் தலைவர், அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தடைந்தார்.

தற்போது அவர் தரிசனத்தை முடித்திருக்கும் நிலையில், மாலை 6 மணிக்கு காரில் திருச்சி விமான நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகை காரணமாக திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+