ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழப்பு... மீளாத்துயரில் மூழ்கிய தமிழகம்
Recommended Video
திருச்சி: மணப்பாறை அருகே கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரிழந்து விட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இன்று அதிகாலை அறிவித்தார்.
நேற்றிரவு 10 மணி முதல் ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கயதாகவும் அவர் கூறினார்.
கடந்த 4 நாட்களுக்கும் மேலாக சுஜித்தை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

துர்நாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்பதற்காக 80 மணி நேரத்துக்கும் அதிகமாக மீட்புப்பணிகள் நடைபெற்றன. ஆனால் அந்தச் சிறுவனை உயிருடன் மீட்க முடியாத துரதிர்ஷட நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 10 மணி முதலே ஆழ்துளை கிணற்றுக்கு அருகே துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.

அதிகாலை 2.30 மணி
சிறுவன் உயிரிழந்ததை நள்ளிரவு உறுதிப்படுத்திய அரசு தரப்பு, அந்தத் தகவலை அதிகாலை 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வருவாய் நிர்வாக ஆணையர் செய்தியாளர்களை அழைத்து சிறுவன் சுஜித் உயிரிழந்த தகவலை தெரிவித்தார். மீட்பு குழுவினர் நடத்திய கடுமையான போராட்டங்கள் பலனளிக்கவில்லை என தெரிவித்தார்.

கட்டுப்பாடு
இந்நிலையில் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தை தனது கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்த போலீஸ், அசம்பாவித நிகழ்வு நடக்காத வண்ணம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், தகவல் அறிந்து சுற்றுப்பட்டு கிராமமக்கள் திரள்வார்கள் என்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிராமமே சோகம்
சிறுவன் சுஜித்தை எப்படியாவது மீட்டுவிடமாட்டார்களா, மீண்டு வந்துவிடவேண்டும் என எதிர்பார்த்து தமிழகமே காத்திருந்த நிலையில், அவர் அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு விண்ணுலகிற்கு சென்றுவிட்டான். இதனால் நடுக்காட்டுபட்டி கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மீட்புப்படை
சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் கடந்த நான்கு நாட்களாக போராடிய மீட்புக்குழுவினர் துயரம் தாங்காமல் கண்ணீர் விட்டனர். அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவரும் முயற்சி பலனளிக்காததை எண்ணி துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications