தலைவா.. இங்க வந்து நில்லுங்க தலைவா.. திருச்சியில் கமல் போட்டியிட விரும்பி மனு செய்த வக்கீல்!
கமல்ஹாசனுக்காக திருச்சி தொகுதியில் விருப்ப மனுவை வக்கீல் ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என, அந்த தொகுதியை சேர்ந்த, வக்கீல் கிஷோர் குமார் என்பவர் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
தனித்து போட்டி, அல்லது நல்லவர்கள் இணைந்தால் 3-வது அணி என்று கமல் சொல்லிவிட்டார். ஆனால் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு வலுவான கூட்டணி எதுவும் அமையவில்லை.
இப்போதைக்கு ஆம் ஆத்மி மட்டுமே கூட்டணி வைக்கும்போல தெரிகிறது. அதே நேரத்தில் வெற்றி பெறா முடியாவிட்டாலும், முதல் தேர்தல் என்பதாலும் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதாலும் மய்யத்தின் முழு பலத்தை அறிய கமல் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறார்.

எதிர்பார்ப்பு
இதனால் விருப்ப மனு தாக்கலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மய்யத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கூட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் கமல் சொல்லவும் இதில் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் குழு
பிப்ரவரி 23ம் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. இன்றும், நாளையும் அது பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களாக பெறப்பட உள்ளன. தேர்தல் குழுவின் ஆலோசனைக்கு பின், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

விருப்ப மனு
இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த, வக்கீல் கிஷோர் குமார் என்பவர், 'திருச்சி லோக்சபா தொகுதியில், கமல் போட்டியிட வேண்டும்' என விருப்ப மனு கொடுத்துள்ளார். இதனால், கமல், இந்த தொகுதியில் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

என்னதான் செய்வார்?
ஏற்கனவே சொந்த மாவட்டம் என்பதால் ராமநாதபுரத்தில் கமலை போட்டியிட சொல்லி அங்கிருப்பவர்கள் உரிமையுடன் வலியுறுத்தி வருகிறார்கள். இப்போது திருச்சியிலும் கமலை போட்டியிட வேண்டும் என்று வாஞ்சையுடன் கேட்க துவங்கி விட்டார்கள். எல்லாருமே இப்படி அவரவர் தொகுதிக்கு கமலை கேட்டால், அவர் என்னதான் செய்வார்? எங்குதான் போட்டியிடுவார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!
-
ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது.. திருச்சியில் திமுகவை அட்டாக் செய்த மோடி! -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications