என்ன நடக்குமோ? 100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் ஒரு சிக்கல் இருக்கு.. விளக்கும் அதிகாரிகள்!
சிறுவன் சுஜித்தை மீட்க 100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் முக்கியமான சிக்கல் ஒன்று இருக்கிறது என்று அங்கு பணிபுரிந்து வரும் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
திருச்சி: சிறுவன் சுஜித்தை மீட்க 100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் முக்கியமான சிக்கல் ஒன்று இருக்கிறது என்று அங்கு பணிபுரிந்து வரும் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது நாட்டையே உலுக்கி உள்ளது . கடந்த 65 மணி நேரமாக சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனால் சிறுவன் தற்போது 100 அடியில் இருப்பதால், அவனை மீட்பது மிகவும் கடினமான செயலாக மாறியுள்ளது. 40க்கும் மேற்பட்ட மீட்பு படை குழுவினர் அங்கு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரிக் மிஷின் செல்லவில்லை
நேற்று காலையில் இருந்து மூன்று வகையான ரிக் மிஷின் கொண்டு சுஜித் இருக்கும் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. முதலில் 25 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பின் பாறைகள் இருந்ததால் குழி தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மீண்டும் தோண்டினார்கள்
அதன்பின் மூன்று எந்திரங்களை பயன்படுத்தி 45 அடி வரை பள்ளம் தோண்டிவிட்டார்கள். இந்த நிலையில் தற்போது போர்வெல் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. பாறைகள் இருக்கும் பகுதியை கடந்த பின் மீண்டும் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்படும்.

என்ன சிக்கல்
சிறுவன் சுஜித்தை மீட்க 100 அடிக்கு பள்ளம் தோண்டினாலும் முக்கியமான சிக்கல் ஒன்று இருக்கிறது என்று அங்கு பணிபுரிந்து வரும் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தற்போது சுஜித் இருக்கும் குழிக்கு 10 மீட்டர் தள்ளிதான் இந்த பள்ளம் தோண்டப்படுகிறது. அதனால் அடியில் கிடைமட்டமாக சுரங்கம் அமைக்க வேண்டும்.

சுரங்கம்
அதாவது சுஜித் இருக்கும் பகுதியுடன் இணைக்கும் வகையில் அடியில் கையால் சுரங்கம் தோண்ட வேண்டும். இதை செய்ய 1 மணி நேரம் ஆகலாம். அருகில் உள்ள குழியில் சிறுவன் இருப்பதால் கையால் மட்டுமே இந்த கிடைமட்ட சுரங்கத்தை தோண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் நடக்குமா
ஆனால் அடிப்பகுதியில் பாறைகள் இருந்தால், கிடைமட்டமாக சுரங்கம் தோண்டுவது, அதுவும் கையால் தோண்டுவது மிகவும் சிரமம் ஆகும். ரிக் மிஷினே திணறும் போது கையால் இந்த பணியை செய்வது மிகவும் கடினம் ஆகும். இதை தீயணைப்பு வீரர்கள் எப்படி செய்ய போகிறார்கள் என்ற கடும் குழப்பம் நிலவி வருகிறது.

மாற்றி செய்வார்கள்
இதை செய்ய 1 மணி நேரம் ஆகலாம். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் 30 நிமிடம் வரும். அதனால் இரண்டு வீரர்கள் மாற்றி மாற்றி உள்ளே வெளியே சென்று சுரங்கத்தை தோண்டுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications