திருச்சி - அகமதாபாத் இடையே சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்ட டைம் ஷெட்யூல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி - அகமதாபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

பயனிகளின் நலனுக்காகவும் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அகமதாபாத் - திருச்சி, மதுரை - ஓகா இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. அந்த சிறப்பு ரயில்கள் தற்போது நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Special train to be operated between Trichy to Ahmedabad

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அகமதாபாத்திலிருந்து வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.09419) புறப்பட்டதிலிருந்து 3-வது நாள் காலை 3.45 மணிக்கு திருச்சி வந்தடையும். மறுமார்க்கமாக, திருச்சியிலிருந்து வரும் 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.40 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (09420) புறப்பட்டதிலிருந்து 2-வது நாள் இரவு 9.15 மணிக்கு அகமதாபாத் சென்றடையும்.

இதேபோல, குஜராத் மாநிலம் ஓகாவிலிருந்து வரும் 11,18, 25 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (09520) புறப்பட்டதிலிருந்து 4-வது நாள் காலை 11.45 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக, மதுரையிலிருந்து வரும் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டு ஓகா செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (09519) புறப்பட்டதிலிருந்து 3-வது நாள் காலை 10.20 மணிக்கு ஓகா சென்றடையும்.

வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக ஏராளமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் டிக்கெட்டின் விலையும் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் இதை நம்பியே இருக்கிறார்கள். விரைவு ரயில் என்றில்லை மின்சார ரயில்கள் கூட இன்று நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. பெரும்பாலான வளர்ந்த நகரங்களில் மின்சார ரயில் செல்லாத இடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அது போல் அதிவிரைவு ரயில் என சொல்லப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதில் அலுப்பு தெரியாமல் விரைந்து செல்லும் இடத்தை அடையலாம். கட்டணம் அதிகம் என்றாலும் மக்கள் இந்த ரயில்களை விரும்புகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+