Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆணவம் தான் உங்களை அழிக்கும்.." திடீரென பாஜக நிர்மலா சீதாராமனை விளாசிய ஸ்டாலின்.. என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தைத் திருச்சியில் தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

Tamilnadu CM Stalin targets Nirmala Sitharaman for her speech on relief money for people

திமுக தான் தமிழகத்தில் முதல் கட்சியாகத் தொகுதிப் பங்கீட்டு, வேட்பாளர் தேர்வை முடித்து பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டது. முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திருச்சியில் இன்று தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

சர்ச்சை: அப்போது அவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கடும் எதிர்வினையாற்றினார். சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்மலா சீதாராமன், "எப்போதும் இன்னொருவர் போட்ட பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை.. வெள்ளமா இந்தா ஆயிரம் ரூபாய் எடுத்துக்கோ.. வீடு இடிந்து விழுந்துபோச்சா இந்த 500 ரூபாய் எடுத்துக்கோ.. என்று மக்களை டீல் செய்கின்றன" என்று கூறியிருந்தார்.

ஸ்டாலின் பதிலடி: அவரது பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் அவரது பேச்சைச் சாடியுள்ளார். திருச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், " தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் உங்களுக்கு என்ன அவ்வளவு வெறுப்பு.. தமிழர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டு.. தமிழ் தான் மூத்த மொழி என்று நீலிக்கண்ணீர் வடிக்கலாமா.

சமஸ்கிருத வளர்ச்சிக்கு நீங்கள் கொடுத்த நிதி எவ்வளவு.. தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் கொடுத்த நிதி எவ்வளவு. இதை வந்த பிரதமரால் இங்கே சொல்ல முடியுமா. நீங்கள் பரப்பும் வெறுப்பு தீ என்ன செய்கிறது தெரியுமா.. மத்திய அமைச்சர் ஒருவர் பெங்களூரில் வைத்த வெடிகுண்டு தமிழர்கள் வைத்தது என்கிறார். தமிழர்கள் என்ன வன்முறையாளர்களா.. பயங்கரவாதிகளா.. தமிழ்நாடு மக்களை இப்படியெல்லாம் கொச்சைப்படுத்திப் பேசுகிறார்களே.. பாஜக அரசு மக்களிடம் இருந்து சுரண்டுமே தவிர எதையும் தராது.

பிச்சை எனச் சொல்லலாமா: மக்கள் இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்படும் போது, நமது நிதியில் இருந்து நாம் நிவாரணம் தருகிறோம். அதையும் கூட மனசாட்சியே இல்லாமல் கொச்சைப்படுத்தி, அதில் ஆனந்தம் அடைவது என்ன மாதிரியான அரசியல்.. தமிழ்நாட்டில் இருந்து ஏகப்பட்ட தொகையை வசூல் செய்கிறீர்கள். ஆனால், அதில் தமிழகத்திற்குக் கிடைக்கும் நியாயமான பங்கை ஏன் தர மறுக்கிறீர்கள். அதைத் தான் கேட்கிறோம்.

‛தூக்கம் போனது எங்களுக்கு இல்லை உங்களுக்கு’.. மோடியின் கண்களை பாருங்க! திருச்சியில் விளாசிய ஸ்டாலின்

ஒரு ரூபாய் வாங்கிவிட்டு 29 பைசா திரும்ப வழங்குவது நியாயமா என கேட்கிறோம். அதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களுக்கு நிதியுதவி வழங்குவது பிச்சை என ஆணவமாகச் சொல்கிறார். என்ன வாய்க்கொழுப்பு.. உங்கள் அரசியலுக்காகத் தமிழக மக்களைக் கொச்சைப்படுத்துவீர்களா.. பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவீர்களா.. மக்களுக்குக் கொடுக்கும் எதுவும் பிச்சை இல்லை. அது அவர்களின் உரிமை. பேரிடர்கள் காலங்களில் அவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. அதை திமுக அரசு சரியாகச் செய்து வருகிறது.

சொல்ல முடியுமா: காப்ரேட் நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்கிறார்கள். அங்கே போய் இதுபோல பேசுவீர்களா.. ஏழைகள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா.. ஒரு ரூபாய்க்குப் பொருள் வாங்கினாலும் அதில் மக்கள் வரி கட்டுகிறார்கள். அப்படி இருக்கும் போது பேரிடர் காலங்களில் அரசு உதவ வேண்டும் என்று மக்கள் நினைப்பார்கள். மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் உங்களுக்கு எதற்கு நிதியமைச்சர் பதவி. இந்த ஆணவம் தான் பாஜகவை அழிக்கப் போகிறது" என்று சாடியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+