உள்ளே செல்லாத சக்கரம்..நடுவானில் வட்டமடித்த விமானம்! திருச்சியில் சேஃப் லேண்டிங்.. நடந்தது என்ன?
திருச்சி: திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்தது. விமானம் புறப்பட்ட நிலையில், அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாத நிலையில், 140க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் விமானத்தின் எரிபொருள் தீர்ந்தவுடன் அதனை பத்திரமாக தரை இறக்கும் முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
தமிழகத்தில் சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் விமான போக்குவரத்து துறையில் முக்கிய பங்காற்றுகிறது.

இங்கிருந்து சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் மலேசியா, துபாய் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது.
நாளொன்றுக்கு சுமார் 50 விமானங்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது அங்கு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சர்வதேச தரத்துடன் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுமார் 95 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள ஐந்து சதவீத பணிகளை துரிதப்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்காக சுமார் 150 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்து வருகிறது. திருச்சியில் இருந்து இன்று மாலை சுமார் 141 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட விமான பணியாளர்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.

சுமார் 5.40 மணிக்கு விமானம் ஓடுதளத்திலிருந்து வானில் பறந்த நிலையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானம் நடுவானில் சென்ற போது திடீரென சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை மேலும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து எரி பொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விமானம் நடுவானில் வட்டம் அடித்தது. பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன.
மேலும் விமான நிலையத்தில் தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இருக்கும் நிலையில் விமான பயணிகளும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் அச்சம் அடைந்தனர். அதே நேரத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகத்தினர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் உள்ளிட்டோர் விமான நிலையம் விரைந்தனர். மேலும் விமானம் தரை இறங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் இரவு 8.30 மணிக்கு நேரத்தில் பத்திரமாக விமானம் தரையிறக்கப்படும் என அவர் தெரிவித்தார். எரிபொருள் குறைந்தவுடன் விமானம் தரையிறங்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் சுமார் 2.30 மணி போராட்டத்துக்குப் பிறகு விமானம் பத்திரமாக தரையிறப்பட்டது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications