திருச்சியில் பள்ளிவாசல் முன் பகுதி இடிக்கபட்டதால் பதற்றம்... 3 மணி நேரம் சாலைமறியலால் பரபரப்பு..!
திருச்சி: திருச்சி திருவானைக்கோவிலில் சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளிவாசல் முன் பகுதி இடிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி திருவானைக்கோவில் மேம்பாலத்தை ஒட்டி சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாம்பழச் சாலையிலிருந்து திருவானைக்கோவில் வரை பாலத்தின் வலதுபுறம் உள்ள கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த பள்ளிவாசல் சர்வீஸ் சாலை அமைக்க இடையூறாக உள்ளதாக கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பள்ளிவாசலின் முன் பகுதியை இன்று காலை இடித்தனர். காவல்துறை உதவியுடன் ஜே.சி.பி.வாகனம் மூலம் பள்ளிவாசல் இடிக்கப்படுவதாக பரவிய தகவலை அடுத்து திருச்சி மாநகரம் முழுவதும் இருந்து இஸ்லாமிய அமைப்புகள் அங்கு திரண்டு சென்றன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது. பள்ளிவாசலை இடிக்க நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்துள்ள நிலையில் அதனை மீறி அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
பள்ளிவாசலின் முன் பகுதி சுமார் 3 அடியில் இருந்து 5 அடி வரை இடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே இந்த நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பள்ளிவாசல் கட்டிடத்தை இடிக்க அதிகாரிகளுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என வினவியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட திருச்சி மண்டல நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications