பேச்சை நிறுத்துயா! நீயென்ன யோக்கியமா? ரிப்போர்டரை ஒருமையில் பேசிய திருநாவுக்கரசர்!
திருச்சி: ''பேச்சை நிறுத்துயா, கெட்டவார்த்தையில் பேசினால் தான் நீயெல்லாம் அடங்குவ'' என்பன உள்ளிட்ட ஏடாகூடா வார்த்தைகளால் திருச்சியில் செய்தியாளர் ஒருவர் மீது திருநாவுக்கரசர் பாய்ந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருநாவுக்கரசருக்கு எங்கேயோ யார் மீதோ உள்ள கோபத்தை செய்தியாளர் மீது கொட்டித் தீர்த்திருப்பது அவருக்கு தான் பின்னடைவை தரும் வகையில் அமைந்துள்ளது. காங்கிரஸில் மீண்டும் எம்.பி.சீட் கிடைப்பது கடினம் எனக் கூறப்படும் நிலையில் திருநாவுக்கரசர் இவ்வாறு பொதுவெளியில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்.

திருச்சிக்கே நீங்கள் வருவதில்லையே, தேர்தல் வந்தால் மட்டும் வருகிறீர்களே என ரிப்போர்டர் கேள்வி எழுப்பிய போது, ''நீ பொய் சொல்ற, யாரிடமோ காசு வாங்கிக்கொண்டு இப்படி கேட்கிறாய், சீமான் பாணியில் இனி நான் கெட்ட வார்த்தையில் பேசினால் தான் நீ அடங்குவ.. யாருக்கோ அடிமையாக இருந்து கேள்வி கேட்குற, யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்குற, நான் திருச்சிக்கு வந்துகிட்டு தான் இருக்கேன், நீ பார்க்காவிட்டால் நான் என்ன செய்வது, நீ ஊருக்கு போயிருப்ப, நீயென்ன பெரிய யோக்கியனா, உன்னிடம் சர்டிபிகேட் கேட்டேனா, பிரஸ் என்றால் எது வேண்டாலும் கேட்பியா, உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல, இஷ்டம்னா எடு இல்லைன்னா போய்கிட்டே இரு'' என ஒருமையில் தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டார் திருநாவுக்கரசர்.
மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் பாஜகவில் இணையப் போவதாக தகவல் உலா வருகிறதே என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பு என்று கூட பார்க்காமல், ''செருப்பால் அடிப்பேன், சொல்றவனை செருப்பால் அடிப்பேன்'' என கொதித்தார். தனக்கு 50 ஆண்டுகால அரசியல அனுபவம் உள்ளதாக சினிமா படம் ஒன்றில் ராதாரவி வசனம் பேசுவதை போல், தனக்கு 50 ஆண்டு கால அரசியல அனுபவம் இருப்பதாகவும் ரிப்போர்ட்டர்களாக இருக்கும் நீங்கள் பிறக்கும் முன்பே தாம் அரசியல் வாதி எனவும் அகங்காரக் குரலில் பேசினார்.
தமிழக அரசியலில் மூத்த அரசியல்வாதியாக அறியப்படும் திருநாவுக்கரசரிடம் இருந்து இது போன்ற வார்த்தைகள் வெளிவரும் என்பதை எதிர்பார்க்காத திருச்சி செய்தியாளர்கள் பதிலுக்கு தாங்களும் மடக்கினர். மொத்தத்தில் யார் மீதோ உள்ள கடுப்பை, கோபத்தை செய்தியாளர்கள் மீது கொட்டித் தீர்த்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications