திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு.. சொத்துக் குவிப்பு என புகார்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் திருவாரூர் மாவட்ட துணை ஆட்சியர் பவானி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Recommended Video

    ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு.. சொத்துக் குவிப்பு என புகார்

    ஏற்கனவே திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாசில்தாராக இருந்த பவானி வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.

    பவானிக்கு சொந்தமான மன்னார்குடி, மற்றும் ஸ்ரீரங்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    உங்களை எடுக்க முடியாது.. கேப்டனுக்கே தகவல் அனுப்பிய ஐபிஎல் அணி- ரீடெயினில் நடக்க போகும் செம ட்விஸ்ட்உங்களை எடுக்க முடியாது.. கேப்டனுக்கே தகவல் அனுப்பிய ஐபிஎல் அணி- ரீடெயினில் நடக்க போகும் செம ட்விஸ்ட்

    முன்னாள் தாசில்தார் பவானி

    முன்னாள் தாசில்தார் பவானி

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் பவானி. இவர் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தனித் துணை ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது மன்னார்குடியில் வசித்து வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. அதற்குக் காரணம் இவருக்கு ஸ்ரீரங்கம் மற்றும் மன்னார்குடியில் வீடுகள், லால்குடி அருகே பெட்ரோல் பங்க், தனியார் பள்ளி மற்றும் அலுமினிய தொழிற்சாலை உள்ளதாக கூறப்படுகிறது.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

    லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

    இந்நிலையில் ஸ்ரீரங்கம் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள பவானி வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சென்றனர். சாரதி நகர் 2வது தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு லஞ்ச ஒழிப்பு துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். மேலும் வீட்டிற்குள் இருந்து யாரும் வெளியில் செல்லாதவாறு கதவுகள் மூடப்பட்டன. செல்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது..

    பெட்ரோல் பங்க், பள்ளியில் சோதனை

    பெட்ரோல் பங்க், பள்ளியில் சோதனை

    இதுமட்டுமின்றி பவானிக்கு சொந்தமானது என கூறப்படும் திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள வாளாடி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம்,
    மணச்சநல்லூர் சாலையில் உள்ள எஸ்.வி.ஆர். மேல்நிலைப் பள்ளி, அரியலூர் மாவட்டம் டால்மியாபுரத்தில் உள்ள அலுமினிய தொழிற்சாலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சக அதிகாரிகள் கலக்கம்

    சக அதிகாரிகள் கலக்கம்

    ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தாரரும், தற்போதைய திருவாரூர் துணை ஆட்சியருமான பவானி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது அங்குள்ள ஒரு சில அரசு அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Anti-corruption police are conducting a raid at the house of Thiruvarur Deputy Collector Bhavani in Srirangam. Bhavani, a former Srirangam thasildar, was accused of amassing wealth in excess of his income. Anti-corruption police are conducting raids on Bhavani's house, school and offices in Mannargudi and Srirangam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X