தந்தை இறந்ததால் டிசி கேட்ட மாணவன்.. ரூ 8 லட்சம் செலுத்திவிட்டு வாங்கிகோ என கறார் காட்டும் கல்லூரி
திருச்சி: தந்தை இறந்ததால் வேளாண்மை படிப்பைத் தொடர முடியவில்லை. எனவே மாற்றுச் சான்றிதழ் எனப்படும் டிசி கொடுங்கள் என மாணவர் கெஞ்சியும், கல்லூரி நிர்வாகமோ ரூ 8 லட்சம் கொடுத்தால் டிசி தருகிறேன் என கறாராக கூறிவிட்டதாக குடும்பத்தினர் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்கள்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிரகாரம் வட்டம், அக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நவநீத கோபாலகிருஸ்ணன் மகன் சூரியபிரகாஷ் (18). இவர் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவர்.
விவசாய கூலித் தொழிலாளியான நவநீதிகிருஷ்ணன் தனது மகன் சூரியபிரகாஷை திருச்சி சிறுகனூர் பகுதியில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரியில் 2018 - 19-ஆம் ஆண்டில் பிஎஸ்சி அக்ரி ஹான்ஸ் முதலாம் ஆண்டு சேர்த்தார்.

சூரிய பிரகாஷ்
அப்போது ரூ.1லட்சத்து 85 ஆயிரம் செலுத்தி அதே கல்லூரியில் விடுதியில் தங்கி கல்வி பயின்றார். அப்போது கல்லூரி நிர்வாகம் பட்டியல் இன மாணவர் என்பதால் அரசு உதவித் தொகையிலேயே கல்வி பயிலலாம் எனக் கூறியுள்ளனர். முதலாம் ஆண்டு கல்வி பயின்ற மாணவன் சூரியபிரகாஷ் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் போது, மீண்டும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் பணம் கட்ட வற்புறுத்தியுள்ளனர் கல்லூரி நிர்வாகத்தினர்.

மனஉளைச்சல்
கொரோனா பரவல் காரணமாக போதிய வருவாய் இல்லாத நிலையில் மன உளைச்சலான மாணவனின் தந்தை மாரடைப்பால் அண்மையில் உயிரிழந்தார். தந்தை உயிரிழந்ததால் படிப்பைத் தொடர முடியாத நிலையில் மாணவனும், அவனது தாய் ராமஜெயந்தியும், கல்லூரிக்கு வந்து குடும்ப சூழ்நிலையினை கூறி மாற்றுச் சான்றிதழ் கொடுத்தால், தூத்துக்குடி பகுதியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று கொள்ளலாம் என கேட்டுள்ளனர்.

மண்ணெண்ணெய்
ஆனால் கல்லூரி நிர்வாகம் மூன்றாண்டுக்கும் செலுத்த வேண்டிய ரூ.8 லட்சத்தை செலுத்தினால்தான் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியும் என கூறினர். இதுகுறித்து சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந் நிலையில் தனது மகனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்க மறுத்ததால் கல்லூரி நுழைவு வாயிலிலேயே , தானும் தனது மகனும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு சாவதை தவிர வேறு வழியில்லை என்றார் மாணவனின் தாய் ராமஜெயந்தி.

மின்சார வசதி
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, மேனேஜ்மென்ட் கோட்டாவில்தான் மாணவன் சூரியபிரகாஷ் சேர்ந்தார். கல்லூரிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 8 லட்சம் செலுத்தினால் அவரது மாற்றுச்சான்றிதழை செலுத்த தயாராக உள்ளோம் என்றனர். கடந்தாண்டு இக்கல்லூரியில் போதிய மின்சார வசதி இல்லை, குடிநீர் மற்றும் கழிவறை இல்லை.

தேவையான தோட்டம்
முறையான ஆசிரியர்கள் , செய்முறைக்கு தேவையான விவசாய பண்ணைத் தோட்டங்கள் இல்லாததால், கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதலாண்டு மாணவன் மனோஜ்குமார் உள்ளிட்ட 3 மாணவர்கள், 2 மாணவிகள் இக் கல்லூரியில் படிக்க விருப்பமின்றி தலா ரூ 1 லட்சம் கல்லூரிக்கு செலுத்தி விட்டு மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications