திருச்சியில் 36 திருநங்கைகளுக்கு ரூ 1500 மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய ஆட்சியர்
திருச்சி: திருச்சி மாநகராட்சி சார்பில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை இன்று மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் வழங்கினார்.
மாநகராட்சிப் பகுதியில் கொரோனா தொற்று தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் திருநங்கைகள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொரோனா நிவாரணப் பொருட்களை மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் வழங்கினார்.
கொரோனா நோய் தொற்றின் காரணமாகவும், கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாநகராட்சி பகுதியில் எந்தவிதமான வருமானமின்றி, ஆதரவின்றி இருக்கும் திருநங்கைகளுக்கு உதவிடும் வகையில் பொன்மலை கோட்டம் உதவி ஆணையர் எம்.தயாநிதி ஏற்பாட்டில் 36 திருநங்கைகளுக்கு அரிசி , மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ரூ.1500 மதிப்பிலான உணவுப்பொருட்களை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் ஆணையர் தெரிவித்ததாவது, ஆதரவின்றி இருக்கும் திருநங்கைகள் தாங்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க பயன்படுத்தும் முக கவசங்கள் தயார்செய்து கொடுத்தால் அதை மாநகராட்சி நிர்வாகம் வாங்கி கொள்வோம் என்று தெரிவித்தார். அனைவரும் கட்டாயமாக முக கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications