நைட் வீட்டுக்கு வந்து.. அம்மா சேலையை தேடி எடுத்து.. கொட்டகையில் தூக்கு போட்டு கொண்ட போலீஸ்காரர்!
திருச்சியில் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
திருச்சி: டியூட்டி முடிச்சிட்டு நைட் வீட்டுக்கு வந்ததும், அம்மா புடவையை தேடி எடுத்து கொண்டு, மாட்டுக் கொட்டகைக்கு போய் தூக்கு போட்டுக் கொண்டார் ஒரு போலீஸ்காரர்.. இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருப்பரைது பெரிய நகரில் வசித்து வந்தவர் ஆனந்த்.. 26 வயசாகிறது.. இவர் வாத்தலை போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்து வருகிறார்.. நேற்றிரவு இவர் டியூட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.. 11 மணி வரை உட்கார்ந்திருந்தார்.

பிறகு திடீரென தன்னுடைய அம்மா புடவையை தேடி எடுத்தார்.. பிறகு வீட்டுக்கு பின்னாடி இருந்த மாட்டுக் கொட்டகை சென்று, அங்கேயே தூக்கு மாட்டி தற்கொலையும் செய்து கொண்டார், இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அலறி துடித்தனர்.. தகவலறிந்து ஜீயபுரம் போலீசாரும் வந்துவிட்டனர்.
சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து, விசாரணையையும் ஆரம்பித்தனர். அப்போதுதான் இந்த போலீஸ்காரர் ஆனந்த், ரம்மி விளையாடுபவர் என தெரியவந்தது.. எப்பவுமே ஆன்லைனில் ரம்மி விளையாடுவாராம்.. இந்த ரம்மி விளையாட்டுக்காக தன்னுடைய நண்பர்களிடம் கடன் வாங்கியும் விளையாடி வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இந்த கடன் தொகையே அதிகமாகிவிட்டது.. மன உளைச்சலை தீர்த்து கொள்ள ரம்மி விளையாட போய், அதனாலேயே இன்னும் அதிகமான மன உளைச்சல் இவருக்கு வந்துவிட்டது.. இதன் காரணமாகவே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக முதல்கட்டமாக போலீசார் சொல்கிறார்கள். எனினும் உண்மை காரணத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இப்படித்தான் சென்னையில் 10 நாளைக்கு முன்பு நித்திஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.. அவரும் ஆன்லைனில் சீட்டு விளையாடி, பணத்தை தொலைத்து, கடனை வாங்கி, அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி, இளைஞர்களை மெல்ல மெல்ல கொன்று வருகிறது இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள்.. விளையாட்டில் மூழ்கிவிடுவதால், அப்படியே மாரடைப்பு ஏற்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமும் ஈரோட்டில் நடந்தது.. இதெல்லாம் அநியாய மரணங்கள்.. டிக்டாக் மாதிரி இதற்கெல்லாம் தடை விதித்தாலும் நல்லாதான் இருக்கும்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications