திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு.. தவறான சிகிச்சை காரணமா? ஆராய குழு அமைப்பு
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் மருந்துவரின் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து மாணவி தவறான சிகிச்சையில் தான் உயிரிழந்தாரா என்பதை கண்டறிய, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் பாஸ்கர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தவறான சிகிச்சையே மரணத்திற்கு காரணம் என உறவினர்களும் சக மாணவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி சீதாலட்சுமிக்கு, சில நாட்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டது. தான் பயின்று வந்த அதே மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதாலட்சுமிக்கு, மூக்கில் சதை வளர்ந்திருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதாலட்சுமியின் மரணத்திற்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதே காரணம் என சக செவிலிய மாணவிகளும், பெற்றோரும் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications