திருச்சியில் கோவில் அருகே 2 நாட்களாக கேட்பாரற்று கிடந்த காரால் பீதி- உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சி: திருச்சியில் அய்யப்பன் கோவில் அருகே கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று கிடந்த கார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. முபினின் வீட்டிலும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

கார் சிலிண்டர் வெடிப்பு
இதனைத் தொடர்ந்தே கோவை கார் வெடிப்பு சம்பவமானது பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என தெரியவந்தது. மேலும் முபின் கூட்டாளிகள் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.க்கு மாற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

கார்கள் பறிமுதல்
இதனிடையே கோவையின் பல பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 7 கார்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த கார்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதேபோல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சாலை ஓரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

திருச்சியில் கார் பீதி
இந்நிலையில் திருச்சி கண்டோமென்ட் ஐயப்பன் கோவில் அருகில் விபத்துக்குள்ளான கார் ஒன்று 2 நாட்களாக நின்று கொண்டிருப்பதாக திருச்சி கண்டோன்மென்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இத்தவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு விபத்து ஏற்பட்டு நின்று கொண்டிருந்த TN 45AA4947என்ற எண் கொண்ட காரை சோதனையிட்டு பின்னர் அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

உரிமையாளரை தொடர்பு கொள்ள முயற்சி
தொடர்ந்து அந்த கார் யாருக்கு சொந்தமானது? எப்படி விபத்து ஏற்பட்டது? அப்பகுதியில் காரை தனியே விட்டு சென்ற நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கரூர் மாவட்டம் கருப்பத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அரவிந்த், கார் உரிமையாளர் என தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர். கோவையில் சிலிண்டர் வெடித்த கார், 10 பேரின் கைகள் மாறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications