புறப்பட்ட சில நொடிகளில்.. ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்ட திருச்சி - ஷார்ஜா விமானம்! 180 பயணிகள் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையிலேயே திடீரென நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரமாக விமானத்துக்கு உள்ளேயே பயணிகள் காத்திருந்தனர். இந்நிலையில், அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இன்று பகல் 12 மணிக்கு மாற்று விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

திருச்சியில் இருந்து இன்று துபாயின் சார்ஜாவிற்கு இன்று கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. இந்தக் கோளாறை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 2 மணி நேரமாக விமானத்திற்குள்ளேயே பயணிகள் காத்திருந்தனர்.

Trichy flight airport

அதைத்தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டுள்ளனர். இன்று பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+