பூஜை ஒன்றையே உயிர் மூச்சாக கருதுகிறோம்.. துர்கா ஸ்டாலினிடம் ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள் கோரிக்கை..!
திருச்சி: ஆண்டாண்டு கால வழக்கப்படி கோயில்களில் வழிபாடு நடத்த அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
மேலும், பூஜை ஒன்றையே தாங்கள் உயிர் மூச்சாக கருதி வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் துர்கா ஸ்டாலினிடம் தெ ரிவித்துள்ளனர்.
இதனிடையே ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின், அதனை முதலமைச்சரிடம் கொடுத்துவிடுவதாக உறுதியளித்திருக்கிறார்.

ஆன்மிகப் பயணம்
முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஆன்மிகப் பயணமாக திருச்சியில் முகாமிட்டு பல்வேறு முக்கிய கோயில்களுக்கு சென்று வழிபட்டார். தேர்தல் நேரத்தில் தனது கணவர் மு.க.ஸ்டாலினுக்காக செய்த பிரார்த்தனைகள் பலித்ததால் இப்போது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அவர் இப்போது ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த புதன்கிழமை திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சில கிலோ மீட்டர்கள் பாதயாத்திரையாக சென்று நன்றிக்கடன் செலுத்தினார்.

ஸ்ரீரங்கம் கோயில்
அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில், ஸ்ரீரெங்கம் அரங்கநாதர் கோயில் என சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றினார் துர்கா ஸ்டாலின். அப்போது அவரை சந்தித்த ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள், கோரிக்கை மனு அடங்கிய கடிதம் ஒன்றை அவரிடம் கொடுத்து முதலமைச்சரின் கவனத்துக்கு இதை கொண்டு செல்லுமாறு கோரசாக குரல் கொடுத்தனர்.

உருக்கம்
பூஜை வாழ்வாதாரத்தை தவிர வேறு எந்த ஊதியமும் தாங்கள் பெறுவதில்லை என்றும் பூஜை ஒன்றையே உயிர்மூசாக கருதி வாழ்ந்து வருவதால் அதற்கு இடையூறு ஏற்படாமல் ஆண்டாண்டு கால வழக்கப்படி வழிபாடு நடத்த அரசு உறுதுணையாக நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மேலும், தங்களின் வாரிசுகளும் கோயில்களில் தான் கைங்கர்யங்கம் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

உறுதி
மேலும், கோயிலில் மேற்கொள்ள வேண்டிய புதிய வசதிகள் தொடர்பாகவும் எடுத்துக்கூறினர். இதனை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட துர்கா ஸ்டாலின், கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் கொடுப்பதாக ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்களிடம் உறுதியளித்துவிட்டு புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications