திருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் கோளாறு.. 167 பயணிகள் உயிர் தப்பினார்கள்
திருச்சி: 167 பயணிகளுடன் திருச்சியிலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் 20 மணி நேரம் தாமதாக புறப்பட்டுச் சென்றது.
கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஏா் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இதே விமானத்தில் கோலாலம்பூா் செல்ல பதிவு செய்திருந்த 167 பயணிகள் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அமர வைக்கப்பட்டார்கள்

விமானம் ஒடு தளப்பாதைக்கு சென்று, மேலே பறக்க முயற்சித்த போது தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். அத்துடன் விமானத்தை ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டு வந்தார்.
தகவலறிந்து வந்த பொறியாளா்கள் குழுவினா், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.எனினும் என்ஜின் பகுதியில் ஆயில் கசிவு காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை உடனடியாக சரி செய்வதில் சிக்கல் நீடித்தது.
இதையடுத்து மலேசியாவில் இருந்து உதிரிப்பாகம் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. 20 மணி நேரத் தாமதத்துக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு 143 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. இதற்கிடையே கோளாறு காரணமாக பயணிகள் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனா். சிலா் அடுத்தடுத்த விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ளவா்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு, வேறு தேதிகளில் முன்பதிவு செய்துக் கொண்டனா். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications