சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு
திருச்சி: சமூக வலைதளத் தந்திரங்களை தவெகவினர் பயன்படுத்தி வென்றுள்ளனர்- எப்போதும் மெத்தனமாக இருக்காமல் அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும் என திருச்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசினார்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்களில் ஜூன் 3-ம் தேதி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் அன்று கழக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி, கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளை சமூக வலைதளங்களில் வீடியோக்களாக பதிவிட்டு இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கழக முதன்மைச் செயலாளர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களை நியமித்த கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த திருச்சி மாவட்ட வாக்காள பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக கழக முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு உரையாற்றுகையில், "சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் குறித்தும், கழகத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.
"திமுக இன்றும் தனித்து நின்று களம் காணும் நிலையில் உள்ளது. நம்முடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர தோழமை கட்சிகள், பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காகத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் போன்ற கட்சிகள் முந்தைய காலங்களில் நம்மை இக்கட்டான நிலைக்குத் தள்ளிச் சென்ற வரலாறும் உண்டு.
தற்போதைய தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், நமக்கும் எதிர்தரப்பிற்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 17 லட்சம் தான். 27 தொகுதிகளில் நாம் 1,000 முதல் 2,000 வாக்குகள் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்திலேயே வெற்றியைத் தவறவிட்டிருக்கிறோம். தேர்தல் இன்னும் சில நாட்கள் முன்னதாக நடந்திருந்தால் வெற்றி வாய்ப்பு நமக்கே சாதகமாக இருந்திருக்கும். கடைசி மூன்று நாட்களில் வீசிய ஒரு மாற்றுக் காற்றினால் இந்தச் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முன்பு திமுக - அதிமுக என்றிருந்த போட்டி, இன்று ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சியான நமக்கும் இடையிலான போட்டியாக மாறியிருக்கிறது. தமிழக வெற்றிக்கழகம் போன்ற புதிய வரவுகள் வாக்குகளைப் பிரித்துள்ளன. அதிமுக கூட்டணியின் வாக்குகள் எங்கு திரும்பும் என்ற கணக்கும் உள்ளது.
குறிப்பாக, சமூக வலைதளங்களை மிகத் தந்திரமாகப் பயன்படுத்தி, இளைய தலைமுறை மற்றும் குடும்பங்களிடம் அவர்கள் நேரடியாகச் சென்றடைந்து வாக்குகளைப் பெற்றுள்ளனர். நாம் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் இருந்த நேரத்தில் அவர்கள் இந்தத் தந்திரத்தால் முன்னேறியுள்ளனர்.
கழகத்தை மீண்டும் வலுப்படுத்த முத்தமிழறிஞர் கலைஞர் என்ற பெயரே மிகப்பெரிய ஆயுதம் உள்ளது. ஜூன் 3-ஆம் தேதி கலைஞரின் 103-வது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு கிளைக்கழகத்திலும் கழகக் கொடியேற்றி, பள்ளி மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கலைஞரின் புகழையும், சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமே நாம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியும்.
அமைச்சராக எனக்கு இருக்கும் பொறுப்பை விட, களத்தில் நிற்கும் ஒன்றியக் கழகச் செயலாளர்களுக்குப் பொறுப்பு அதிகம். கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது திருச்சி மாவட்டம் தான் எப்போதும் அரணாக நின்று வெற்றியைத் தேடித்தந்தது. அதேபோல், இப்போதும் மெத்தனமாக இருக்காமல் அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார்,அன்பில் பெரியசாமி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
-
“இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே”! விஜய்யின் பயிர்க்கடன் ரத்து.. விவசாயிகள் அப்செட் -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம் -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு!












Click it and Unblock the Notifications