மண் சரியாது.. பாறை என்பது நல்வாய்ப்பு.. தடைக்கல்லை படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.. வைரமுத்து
சுஜித் மீட்பதே நமது குறிக்கோள் என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "பாறை என்பது நல்வாய்ப்பு, மண் சரியாது.. தடைக்கல்லை படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.. நமது குறிக்கோள் குழந்தை மீட்புதான்" என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சுஜித் மீட்கப்பட்டு விடுவானா என்ற ஆதங்கத்தில் உள்ளது. மக்களின் பிரார்த்தனைகள் நீண்டு வருகிறது. குழந்தையை மீட்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.. இதனிடையே பல்வேறு பிரபலங்கள் சுஜித் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் இதே கோரிக்கையை பதிவிட்டு இருந்தனர். தமிழக அமைச்சர்கள் நிகழ்விடத்திலேயே முகாமிட்டு உள்ளனர். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரிலேயே வந்து பார்வையிட்டு, நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி, குழந்தையை மீட்க அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றோரும் சுஜித் பத்திரமாக மீட்க வேண்டும் என்று கூறியிருந்தனர். புதிதாக தோண்டப்பட்டு வரும் குழாயில் நேற்றே வீரர்கள் இறங்கி சுஜித்தை மீட்பதாக இருந்தது. அதனால் கவிஞர் வைரமுத்துவும், நேற்றே ஒரு பதிவு போட்டிருந்தார். "குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
அரசு எந்திரத்தையோ
— வைரமுத்து (@vairamuthu) October 28, 2019
ஆழ்துளை எந்திரத்தையோ
குறை சொல்லும் நேரமில்லை;
குழந்தை மீட்பே குறிக்கோள்.
பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது.
தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.
ஆனால், ரிக் இயந்திர கோளாறு காரணமாக மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிறைய பாறைகள் இருப்பதால் குழியை வேகமாக தோண்ட முடியவில்லை என்கிறார்கள். இந்நிலையில், வைரமுத்து திரும்பவும் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், "அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்" என்று பதிவிட்டுள்ளார். இதனிடையே நடிகர் தாமு நடுக்கட்டிபட்டிக்கு வந்தார். குழந்தையை மீட்கும் இடத்தில், பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications