சக்ஷன் முறையில் எப்படி சுஜித்தை மீட்பார்கள்?
உறிஞ்சி எடுக்கும் புதிய தொழில்நுட்ப முறை என்றால் என்ன?
Recommended Video
திருச்சி: 70 அடியில் இருந்த குழந்தை சுஜித் 80 அடியில் விழுந்துவிட்டான்.. இதனால் சுஜித்தை மீட்பதில் மிகப் பெரி சவால்களை மீட்புப் படையினர் சந்தித்து வருகின்றனர். பல வழிகளை முயன்றும் கூட எதுவும் பலனளிக்காத நிலையில் தற்போது சக்ஷன் முறையை கையில் எடுத்துள்ளனர் தேசிய பேரிடர் மீட்புப் படையினர். இன்னொரு பக்கம் சுரங்கம் போன்று குழி தோண்டி குழந்தையை எடுக்க என்எல்எசி குழு இறங்கி உள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் போர்வெல்களில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை இதுபோன்ற முறையில் பொதுவாக மீட்பது வழக்கம்தான். தற்போது சுஜித்தையும் இதே பாணியில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுஜித்தை மீட்க நேற்று மாலை 5.40 மணியிலிருந்து மீட்புப் படையினர் முயன்று வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை. மாறாக 70 அடிக்குக் கீழ் போய் விட்டான் குழந்தை. சற்று நேரத்துக்கு முன்பு 70 80 அடிக்கு கீழ் இறங்கிவிட்டான். அதாவது 600 அடி ஆழமுள்ள கிணற்றில் 80-வது அடியில் உள்ளான் குழந்தை சுஜித். இதனால் குடும்பத்தினரும், கிராமத்தினரும், ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தற்போது புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். அதுதான் சக்ஷன் எனப்படும் உறிஞ்சி எடுக்கும் முறை. தற்போது சிறுவனின் தலைப் பகுதியில் மண் மூடிக் கிடப்பதால் மண்ணை முதலில் கம்ப்ரசர் மூலம் அப்புறப்படுத்தி விட்டு சிறுவனை அங்கிருந்து சக்ஷன் முறையில் வெளியில் கொண்டு வரதிட்டமிட்டுள்ளனர்.
இந்த முறையின்படி சிறுவனின் தலை அல்லது கைப் பகுதியில் ஒரு கருவி பொருத்தப்படும். நன்றாக இறுகிப்பிடித்துக் கொள்ளும் அந்தக் கருவியை மேலிருந்து இயக்கி அப்படியே அலேக்காக மேலே தூக்கி வருவதுதான் இந்த சக்ஷன் முறையின் திட்டம். இதற்கு முன்பு இதுபோல செய்துள்ளனர். ஆனால் சுஜித் விஷயத்தில் நிறைய சிக்கல்கள் இருப்பதால் இந்த முயற்சி எந்த அளவுக்கு பலன் தரும் என்று தெரியவில்லை.
ஒருவேளை இதன்மூலம் பலன் தரவில்லை என்றால், மாற்று வழி மூலம் குழந்தையை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் என்எல்சி குழுவினர் குழந்தையை மீட்க இன்னொரு பக்கம் முயற்சி மேற்கொள்கின்றனர். அதாவது கிணறுக்கு ஒரு மீட்டருக்கு அருகிலேயே சுரங்கம் போன்ற குழி தோண்டி குழந்தையை எடுக்க முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் தனியார் அமைப்பும் இணைந்து 70 அடி ஆழத்துக்கு இந்த போர்வெல் போடும் வேலையில் இறங்கி உள்ளனர். இதன்மூலம் குழந்தையை எளிதாக மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பார்க்கலாம்.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications