சுஜித்தின் உடலை ஏன் வெளியே காட்டவில்லை? துணியால் மொத்தமாக மறைத்தது ஏன்? தமிழக அரசு விளக்கம்
குழந்தை சுஜித்தின் உடலை நேற்று ஏன் மொத்தமாக துணியை வைத்து மறைத்து இருந்தனர் என்று தமிழக அரசு சார்பாக பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: குழந்தை சுஜித்தின் உடலை நேற்று ஏன் மொத்தமாக துணியை வைத்து மறைத்து இருந்தனர் என்று தமிழக அரசு சார்பாக பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் இன்னும் தமிழகத்தை உலுக்கிக்கொண்டு இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். இவரை மீட்கும் பணிகள் நான்கு நாட்களாக நடந்து வந்தது.
ஆனால் 80 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்து கடைசியில் சுஜித் சடலமாக மீட்கப்பட்டார். சுஜித்திற்கு நேற்று இறுதிச்சடங்கு நடந்தது.

காட்டவில்லை
இந்த நிலையில் சுஜித்தின் உடலை நேற்று வெளியே யாரிடமும் காட்டவே இல்லை. உடலை துணி மூடியபடிதான் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அதேபோல் மொத்தமாக முகத்தையும் மூடிதான் பிரேத பரிசோதனை செய்து கொண்டு வந்தனர். உடலில் எல்லா பகுதியும் கவனமாக மூடப்பட்டு இருந்தது.

எப்படி
இந்த நிலையில் சுஜித் உடலை ஏன் இப்படி மறைத்து இருந்தார்கள் என்று நேற்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். உடலின் சில பாகங்கள் கிடைக்கவில்லை என்றும் கூட செய்திகள் வெளியானது. தற்போது தமிழக அரசு சார்பாக இந்த அனைத்து கேள்விகளுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

காட்சிப்படுத்துதல் எப்படி
அதில், உயிரிழந்தவர்களை காட்சி படுத்துவது தொடர்பாக நிறைய விதிகள் இருக்கிறது. அதிலும் குழந்தைகளை, பெண்களை எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்றும் விதி இருக்கிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் தேசிய பேரிடர் குழுக்கள் சில முக்கிய வரையறைகளை வகுத்து இருக்கிறது.

மிக கவனம்
கும்பகோணத்தில் குழந்தைகள் தீ விபத்தில் இறந்த போது, அவர்களின் உடலை காட்சிப்படுத்தியது பெரிய சர்ச்சையானது. அப்போது தமிழக அரசு உலகம் முழுக்க விமர்சனத்தை எதிர்கொண்டது. அதில் இருந்து இதில் தமிழக அரசு மிக கவனமாக விதிகளை வகுத்து பின்பற்றி வருகிறது.

அதுதான் காரணம்
நேற்று நாங்கள் அந்த விதியைத்தான் பின்பற்றினோம். அந்த விதிகளின்படி சுஜித்தின் உடலை பொதுவில் காட்சிப்படுத்த கூடாது. அதேபோல் சுஜித் உடலை நாங்கள் மீட்ட போதும் விதிகளை பின்பற்றினோம். எங்குமே நாங்கள் விதிகளை மீறவில்லை, என்று பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications