"நான்தான் கடவுள்".. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்!
நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்
திருச்சி: கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கியுள்ளார் கணவன்.. "நான் தான் கடவுள்" என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை நண்பனின் மனைவி பர்வீனுக்கு தந்து, அதன்பிறகு பலாத்காரமும் செய்ததாகவும் கூறப்படுகிறது.
திருச்சி கேகே நகர் அன்பில் தர்மலிங்க நகரை சேர்ந்தவர் முகமது அஸ்லம்.. இவரது மனைவி பர்வீன்.. 37 வயதாகிறது.. முகமது இஸ்லாம் முதலில் இந்துவாக இருந்தவர்.. பிறகு முஸ்லிமாக மதம் மாறியவர்.

இவரது நண்பர் முகமது ஃபாருக்... 2 பேரும் அளவு கடந்த நெருக்கம்.. இதைதவிர, 2 பேருமே மதுபோதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது.
தினமும் போதையில் விழுந்து கிடப்பதையே வழக்கமாக வைத்திருந்த 2 பேரிடம் இப்போது காசில்லை.. லாக்டவுனால் அதிக சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இருந்தாலும் முகமது அஸ்லம் ஒரு ஐடியா செய்தார்.. தனது மனைவி பர்வீன் வைத்திருக்கும் தங்க நகையை திருடிவிடலாம் என்று முடிவு செய்து, அதை நண்பனிடம் சொன்னார்.
அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். பிறகு, நண்பர் பர்வீனிடம் சென்று, "நான் தான் கடவுள்" என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை தந்தாராம்.. உடனே அதை வாங்கி குடித்து பர்வீன் மயக்கமடைந்து விழுந்ததும், அவரை நண்பர் பாலியல் கொடுமை செய்ததுடன், வீட்டில் இருந்த 25 பவுன், மற்றும் ரொக்கத்தை திருடி கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
மயக்கம் தெளிந்து எழுந்த, பர்வீன் தனக்கு நேர்ந்த கொடுமை நினைத்து அதிர்ச்சி அடைந்தார்.. பிறகு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசுக்கு இதுகுறித்து புகாரும் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனையும், அவரது நண்பரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. இந்த விவகாரத்தில், பாத்திமா, எரம் ஆகிய 2 பேரும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஆனால் அவர்கள் தலைமறைவாக உள்ளதால், போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications