டாஸ்மாக் கடைகளுக்கு தாய்மார்கள் கடும் எதிர்ப்பு... அமைச்சர்களிடம் ஆதங்கம்
திருச்சி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதற்கு தாய்மார்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் செக்போஸ்ட் அருகே நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தைகளுடன் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி இன்று காலை முழக்கம் எழுப்பினர். அப்போது அவ்வழியாக சென்ற அமைச்சர் வளர்மதி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதனை ஏற்கும் மனநிலையில் இல்லாத தாய்மார்கள், மதுவால் குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும், தங்கள் ஆதங்கத்தையும் அவரிடம் வெளிப்படுத்தினர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் பெண்கள் வீதிக்கு வந்து டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போர்க்குரல் உயர்த்தி வருகின்றனர். மதுவால் குடும்பம் சீரழிவதாகவும், பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்கள் கோரிக்கையை முதல்வரும், அதிகாரிகளும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதனிடையே மதுரையில் கண்டெயின்மெண்ட் ஏற்பாடுகள் குறித்து பார்வையிடச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்கமுடியாமல் சிரமப்படுவதாக பெண்கள் முறையிட்டனர். 28 நாட்களாக தடுப்புக்கட்டைகள் அமைத்து அடைத்து வைக்கப்பட்டால் உணவுக்கு என்ன செய்வோம் என அவர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். அதைக்கேட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ இல்லத்தின் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடைக்கு செல்லூர் பகுதி பெண்கள் ஒன்றுதிரண்டு பூட்டுபோட்டனர். மேலும், மதுவாங்குவதற்காக அங்கு வரிசையில் நின்ற குடிகாரர்களை அங்கிருந்து கலைந்து செல்லவும் வைத்தனர். ஆண்களை விட பெண்களுக்கு மனதைரியம் அதிகம் என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications