முதலாளி மீது ஆத்திரம்.. 3 வயது குழந்தை கொடூர கொலை.. பெண்ணுக்கு இரட்டை ஆயுள்
சிறுவன் கொலை வழக்கில் இளம்பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Recommended Video

திருச்சி: மூன்றரை வயது சிறுவனை கொஞ்சுவது போல் மொட்டை மாடிக்கு தூக்கி சென்று, துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், முகம், மார்பு, ஆணுறுப்பில் கத்தியால் கிழித்தும் கொலை செய்த இளம்பெண்ணுக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி லெட்சுமிபிரபா. இவர்களுக்கு ஷிரிஸ் என்ற மூன்றரை வயது மகன் இருந்தான்.
சிவக்குமார் துரைசாமிபுரத்தில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அந்த கடையில் ரீசார்ஜ் செய்ய வந்த அதேபகுதியை சேர்ந்த ரோஸ்லின் பாக்கியராணி என்ற பெண் சிவக்குமாருக்கு அறிமுகமானார். அவருக்கு வயது 25.

பணத்தை திருடினார்
அதன்பிறகு இருவரும் நட்பாக பழகி வந்தனர். அதன் அடிப்படையில் சிவகுமார் தனது செல்போன் கடையில் அவரை வேலைக்கு சேர்த்தார். ஒருநாள் செல்போன் கடையின் கல்லாபெட்டியில் இருந்து ரோஸ்லின் பாக்கியராணி பணத்தை திருடிவிட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, சிவக்குமார் அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்.

மொட்டை மாடி
இதனால் ஆத்திரம் அடைந்த ரோஸ்லின் சிவக்குமாரின் மகன் ஷிரிஸை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி மதியம் 12.30 மணி அளவில் ஷிரிஸை கீழப்புதூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு மொட்டை மாடிக்கு கொஞ்சுவது போல் தூக்கி சென்றார்.

கழுத்தை நெரித்தார்
அங்கு ஷிரிஸை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், சிறிய கத்தியால் முகம், மார்பு மற்றும் ஆணுறுப்பை கிழித்தும் கொலை செய்தார். பின்னர் சிறுவனின் உடலை சிவக்குமார் வீட்டுக்கு கொண்டு வந்து, தூங்குவதாக கூறி வீட்டில் படுக்க வைத்துவிட்டு சென்று விட்டார்.

ரோஸ்லின் பாக்கியராணி
சிறிதுநேரத்தில் தனது மகன் இறந்து கிடந்ததை கண்ட லெட்சுமிபிரபா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாலக்கரை போலீசிலும் புகார் அளித்தார். அதன்பேரில் பாலக்கரை போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ரோஸ்லின் பாக்கியராணியை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இரட்டை ஆயுள்
இந்நிலையில் இதற்கான தீர்ப்பினை நீதிபதி குமரகுரு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ரோஸ்லின் பாக்கியராணிக்கு 2 பிரிவுகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் வழங்கப்படுவதாக அறிவித்தார். மேலும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications