Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர்களுக்குள் தகராறு.. மாணவர் தலை துண்டித்து படுகொலை

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: தூத்துக்குடி அருகே இரு தரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றால் நடைப்பயிற்சி சென்றபோது கல்லூரி மாணவர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (20). இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

A college students head chopped by college students in Tuticorin

கொலையாளிகள் தலையை எடுத்து சென்றனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தி தலையை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை அவரது தலையை போலீசார் கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள முட்புதரில் கண்டெடுத்தனர்.

கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்திக்கும் கீழகீரணூர் பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் தலைவன்வடலி மற்றும் கீழகீரணூர் பகுதியில் இரண்டு ஏடிஎஸ்பி, மூன்று டிஎஸ்பி தலைமையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மூன்று மாவட்டத்திலிருந்து சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

A college students head chopped by college students in Tuticorin

இந்த கொலை சம்பவத்தில் ஆறுமுகநேரி போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+