ஒரே ஒரு ஓட்டு.. ஸ்ரீவைகுண்டத்தில் அசத்திய அதிமுக வேட்பாளர் சுந்தரி.. மணி செல்வி ஷாக்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு வாக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீவைகுண்டத்தின், 9வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுந்தரி, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 3,537 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 1,129 பதவிகளுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வாகினர்.
7 பதவிகளுக்கு யாரும் வேட்புமனு கூட தாக்கல் செய்யவில்லை. எனவே, அந்த பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. எனவே, 2,401 பதவிகளுக்கு இரு கட்டங்களாக, தேர்தல் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி
இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், அதிமுக வேட்பாளர் சுந்தரி பெற்ற ஓட்டுக்கள் 1152. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணி செல்வி 1151 வாக்குகள் பெற்றார். எனவே, ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுந்தரி வெற்றி பெற்றுள்ளார்.