சீமான் குழந்தைக்கு சீர் செய்ய என்ன காரணம்? தாக்கூருக்கு அருகதை இல்லை! அனிதா ராதாகிருஷ்ணன் அட்டாக்!
தூத்துக்குடி: உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு மணி என்று காங்கிரஸ்காரர்களால் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகின்ற மாணிக்கம் தாக்கூருக்கு எந்த அருகதையும் இல்லை எனவும், நான் சீமான் குழந்தைக்கு சீர் வழங்கியது எனக்கும் அண்ணன் காளிமுத்து அவர்களுக்கும் உள்ள குடும்ப உறவின் தொடர்ச்சி அன்றி வேறொன்றுமில்லை என திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் அரசியலற்ற முறையில் பிதற்றியுள்ளார்.
அரசியல் அறத்திற்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி எடுத்த ஆதரவு முடிவை பலதரப்பட்ட முறையில் விமர்சிக்கப்படுகிறது. திமுக கூட்டணி தர்மத்திற்கு மாறாக காங்கிரஸ் செயல்பட்டதை அரசியலாக விமர்சிக்கிறது.

மாணிக்கம் தாகூர்
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு அரசியலாக பதில் சொல்ல முடியாத மாணிக்கம் தாகூர் தனிப்பட்ட முறையில் பிதற்றுவது நாகரீகமானதல்ல. நான் சீமான் குழந்தைக்கு சீர் வழங்கியது எனக்கும் அண்ணன் காளிமுத்து அவர்களுக்கும் உள்ள குடும்ப உறவின் தொடர்ச்சி அன்றி வேறொன்றுமில்லை.
மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் தமிழர்களின் தன்மானத்திற்காகவும் விடாப்பிடியாக போராடும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் உறுதிமிக்க தொண்டராக நான் என் பணியை செய்து வருகிறேன்.
அனிதா ராதாகிருஷ்ணன்
வெள்ளையனை எதிர்த்து வீரச்சமர் புரிந்து மரணம் எய்திய வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், தளபதி வெள்ளையத்தேவன், கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார், மகாகவி பாரதியார், தப்பை தப்பென மத்திய மந்திரியை விமான நிலையத்தில் மடக்கி கேள்வி கேட்ட கே டி கோசல்ராம் ஆகியோர் பிறந்த மண்ணில் இன்று நாங்கள் தமிழ் மக்களுக்கான உறுதியான அரசியலை செய்து வருகிறோம்.
உதயநிதி ஸ்டாலின்
எங்கள் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு மாணிக்கம் தாக்கூர் (மணி) என்று காங்கிரஸ்காரர்களால் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகின்ற மாணிக்கம் தாக்கூருக்கு எந்த அருகதையும் இல்லை. அரசியலற்ற பேச்சை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் : என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு














Click it and Unblock the Notifications