திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு முழுத் தடை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலுக்குள் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடை வருகிற 01.07.2026 முதல் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. நீங்கள் பொதுத் தரிசனம், ரூ.100 விரைவுத் தரிசனம், முதியோர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என எந்த வரிசையில் சென்றாலும், பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வரும் 01.07.2026 முதல் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பொதுத் தரிசனம், ரூ.100 விரைவுத் தரிசனம், முதியோர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என எந்த வரிசையில் சென்றாலும், பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

Complete ban on mobile phone usage at the Tiruchendur Murugan Temple

பக்தர்கள் தங்கள் செல்போன்களை தாங்கள் தங்கியிருக்கும் அறைகள் அல்லது வாகனங்களிலேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு சாமி தரிசனம் செய்ய வரக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'செல்போன் வைப்பகங்களையும்' (Mobile Deposit Counter) பக்தர்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பரிசோதனையின் போது பக்தர்களிடம் செல்போன் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டுப் பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் அவசரத் தேவைக்கு மருத்துவ மையம், ஆம்புலன்ஸ், பொது அறிவிக்கை அமைப்பு (Public Addressing System), மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி போன்ற வசதிகள் கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை நம்பி கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாழிக்கிணறு பகுதி, முடி காணிக்கை செலுத்தும் இடம், கிரி பிரகாரம் போன்ற இடங்களில் பழக்கடைகள், பூக்கடைகள், பொம்மை வியாபாரங்கள், பச்சை குத்தும் இடங்கள், இனிப்பு வியாபாரங்கள், புகைப்பட கலைஞர்கள், புகைப்பட விற்பனையாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளது. இவற்றை கோயில் நிர்வாகம் அதிரடியாக அகற்றி உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், நடைபாதைகளில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+