தூத்துக்குடியில் உச்சகட்டமான பாதிப்பு.. முழு ஊரடங்கு அறிவிக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலனை?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருவதால் தூத்துக்குடியில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 577 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக சோதனையில் உறுதி செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் 2 பேர் மட்டுமே நேற்று சேர்க்கப்பட்டனர்.

நிறைய பேருக்கு கொரோனா
இன்றைய பட்டியலில் ஏராளமானோர் சேர்க்கப்பட உள்ளது. இதனிடையே இன்று ஒரு நாளில்மட்டும் தூத்துக்குடியில் சுமார் 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தூத்துக்குடியில் 367 பேர் குணம் அடைந்துவிட்டனர். 207 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தூத்துக்குடியில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மக்கள்
தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொரோன தொற்று பரவியுள்ளது. சென்னையில் இருந்து வருவோர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்போருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

கடுமையான கட்டுப்பாடு
எனினும் தூத்துக்குடியில் பழக்கடை வைத்துள்ளவர், மின்சாதன கடை வைத்துள்ளவர் உள்பட கடை வைத்துள்ள சிலருக்கும் கொரோனா தாக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதன் மூலம் பலருக்கும் பரவி இருக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. கொரோனா பரவும் வேகம் அதிகமாக இருப்பதால் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

தூத்துக்குடியில் ஊரடங்கு?
கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனவே, ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்துவிட்டு, கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இன்னும் சில நாளில் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். நாளை மறுநாள் (ஜூலை 24) தமிழக முதல்வர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பிறகு அறிவிப்புக்கு வாய்ப்பு உள்ளது.
-
குற்றம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு.. தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. டைம் லைன் -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications