திருச்செந்தூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி தங்க நகைகள் மாயம்.. மக்கள் செய்த சம்பவம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 29 கோடி மதிப்பிலான நகை பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு வங்கி மேலாளரை வங்கிக்குள் செல்லவிடாமல் தடுத்து பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி, போராடியவர்களை கலைந்து போக செய்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட மக்களின் 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானதாகத் தெரியவந்தது. மாயமான நகைகள் இருப்பில் இல்லை என்றும் இருப்பில் இருப்பது போன்று போலியாகக் கணக்கை உருவாக்கி ரூபாய் 2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 வரை மோசடி செய்ததாகத் தெரியவந்துள்ளது.

இதேபோல் வைப்பு நிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாகக் கணக்கை உருவாக்கி ரூ.27 கோடி என மொத்தமாக 29 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று வரை இதை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்கள் தங்களது நகை மற்றும் பணத்திற்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு வருகை தந்த வங்கி மேலாளரை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்ட எங்களுடைய நகை மற்றும் பணத்தை வழங்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குரும்பூர் காவல்துறையினர் வருகை தந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி எஸ்பிஐ வங்கி மோசடி
கிருஷ்ணகிரி எஸ்பிஐ வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆந்திர மாநிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து பல கோடி மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் இவர் கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் இயங்கும் பாரத் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தங்க நகை மதிப்பீடியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18ம்தேதி முதல் குணசேகரன் காணவில்லை என்று அவரது மனைவி பவித்ரா கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே ஆந்திர மாநிலம் குப்பம் அருகே நடுமூர் என்னும் இடத்தில் சாலையோரம் மர்மமான முறையில் உயிரிழந்து இருந்த உடலை ஆந்திர போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர் விசாரணையில் அவரது உடலில் ஆதார் அட்டை இருந்தது அதன்படி உயிரிழந்தவர் குணசேகரன் என போலீசார் உறுதி செய்தனர். குணசேகரன் சைனைடு சாப்பிட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் இடையே குணசேகரன் தான் பணிபுரியும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பல நபர்களின் உதவியுடன் போலி தங்க நகைகளை அடகு வைத்து அதன் மூலம் பல கோடி ரூபாய் வரை பண மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. குணசேகரின் இந்த மோசடிக்கு வங்கி ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது அதன் அடிப்படையில் வங்கி உயர் அதிகாரிகள் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் அவற்றின் தரம் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications