தூத்துக்குடி மக்களே.. மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. கலெக்டர் வார்னிங்
தூத்துக்குடி: வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அந்த மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
புரேவி புயல் பாம்பன் அருகே இன்று மாலை நிலை கொண்டு இருந்த நிலையில், காற்று மற்றும் மழை, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல், நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட காலத்திற்குள், இந்த புயல், பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையைக் கடந்து அரபிக் கடலுக்கு பயணிக்க உள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் மழை மற்றும் காற்று மிக அதிகமாக இருக்கும்.

மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில்தான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று மாலை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், தூத்துக்குடி மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். கடற்கரை போன்ற நீர் நிலைகள் உள்ள பகுதிகளுக்கும் செல்ல கூடாது என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாளை புயல் கரையை கடக்கும் வரை இந்த நிலை நீடிக்கும் என்று தெரிகிறது.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications