ஹைட்ரோகார்பன் திட்டத்தை வாங்க சேர்ந்து எதிர்ப்போம்.. தமிழக அரசுக்கு திமுக எம்பி கனிமொழி அழைப்பு
தூத்துக்குடி: ஹைட்ரோகார்பன் திட்டத்தை திமுகவுடன் சேர்ந்து எதிர்க்க முன்வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக எம்பி கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார. மக்களின் எதிர்ப்பை மீறி அத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்று அரசாணை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். தனது கடிதத்தில் மக்களின் கருத்தை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுததினார்.
இந்நிலையில் குடியரசுத்தின விழாவை தனது சொந்த தொகுதியான தூத்துக்குடியில் எம்பி கனிமொழி இன்று கொண்டாடினார. திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அவர் திருச்செந்தூர் அருகே உள்ள மேல ஆத்தூரில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுடன் கலந்து கொண்டு பேசினார்.
அவர்களை டெல்லியை விட்டே அனுப்புவோம்.. வாக்களியுங்கள்.. அமித் ஷா பேச்சு.. சிசோடியாவின் செம பதில்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி. ஹைட்ரோ கார்பன் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தாதது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயல். ஹைட்ரோகார்பன் திட்டத்தை திமுகவுடன் சேர்ந்து தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்றார். தவறான சட்டம் என்று தெரிந்தால் யார் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்: என்றும் கனிமொழி எம்பி வலியுறுத்தினார்.