தற்காலிகமாக தப்பிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 'தலை'- அமலாக்கத்துறை வழக்கு அக்.11-க்கு ஒத்திவைப்பு!
தூத்துக்குடி: தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தம்மை சேர்க்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை மனு மீதான விசாரணை அக்டோபர் 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முந்தைய 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில், அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய போராடிப் பார்த்தார் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால் எதுவும் அவருக்கு சாதகமாக இல்லை. இதனையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருகிறார்.

இதனிடையே 2020-ம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மீது பண மோசடி வழக்கைப் போட்டது அமலாக்கத்துறை. பின்னர் 2022-ல் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ6.5 கோடி சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியது.
மேலும் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தம்மையும் இணைக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியது அமலாக்கத்துறை. அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது அமைச்சர் என்பதால் வழக்கு விசாரணைக்கு உதவ அமலாக்கத்துறையையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரப்பட்டது.
இம்னுவை ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி நீதிமன்றம், கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் அமலாக்கத்துறை ஆவணங்களைத் தாக்கல் செய்து வாதங்களை முன்வைத்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் அமலாக்கத்துறை மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இன்றும் வழக்கு விசாரணை அக்டோபர் 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications