ஊசி போட்டு கொன்னுவிடுவதாக மிரட்டி.. பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விளாத்திகுளத்தில் போலி டாக்டர் கைது
தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் குழந்தையின் சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் தொந்தரவு குறித்து வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகன் ராபின்சன். விளாத்திகுளத்தில் 'பத்மநாபன் ஆஸ்பத்திரி' எனும் பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நேற்று மதியம் சென்றுள்ளார்.
அப்போது அந்த டாக்டர் சிகிச்சை அளிப்பது போல் பெண்ணுக்கு மருத்துவர் ராபின்சன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என்று அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் மருத்துவமனையில் நடந்தவற்றை இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலையம் சென்று மருத்துவர் ராபின்சன் மீது புகார் அளித்தனர். இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 மற்றும் 506(ii) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டு உள்ள ராபின்சன் ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு போலியாக மருத்துவம் பார்த்ததாக கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் சித்த மருத்துவ முறையில் பயிற்சி பெற்று விட்டு, ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு ஊசி போட்டுக்கொண்டும், மாத்திரை வழங்கியும் மக்களுக்கு சிகிச்சை அளித்த வந்துள்ளார். இதன் காரணமாக அப்போது அவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குழந்தையின் சிகிச்சைக்காக வந்த பெண்மணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமல்லாமல் இது பற்றி வெளியே கூறினால் ஊசி போட்டு கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications