முருகனின் திருவிளையாடல்! திருச்செந்தூர் கடலில் 6 அடி அதிசயம்.. திருநீரைப் பூசியதும் வெளிவந்த வரலாறு!
தூத்துக்குடி: உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த 4வது கல்வெட்டு, முருகப் பெருமானின் முக்கிய வரலாற்றை கூறியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சில கல்வெட்டுகள் கிடைத்த நிலையில், தற்போது புதிய கல்வெட்டு கிடைத்துள்ள நிலையில் அதனை முறையாகப் பாதுகாக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இதைத் தவிர பௌர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக திருச்செந்தூரில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடற்கரைக்கு பக்தர்கள் இறங்கும் படிக்கட்டுகள் தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தின் வழியாக பக்தர்கள் இறங்கி நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருச்செந்தூரில் கடலின் அலைகள் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சுமார் 6 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரையில் தென்பட்டது.
ஆனால் அந்த கல்வெட்டு கவிழ்ந்த நிலையில் கிடந்தது. இதை சரி செய்து கல்வெட்டை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் இணைந்து கடற்கரையில் கிடந்த கல்வெட்டை மீட்க முயற்சித்தனர். இதற்காக கீழே உள்ள கான்கிரிட்டை அகற்ற போராடி வந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கல்வெட்டை மீட்க போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் கல்வெட்டு அதிக எடையுடன் இருந்ததால் நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு நீண்ட நேரம் போராடி கல்வெட்டை புரட்டி போட்டனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த கோவில் பணியாளர்களும் கடற்கரை பணியாளர்களும் கல்வெட்டில் திருநீறு தேய்த்து எழுத்துக்களை படித்தனர். இந்த கல்வெட்டில் சத்திய தீர்த்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதன் பலன் துன்பம் முழுவதையும் நீக்கி நீக்குதற்குரிய ஊழ்வினையை அறவே தொலைத்து வேத சாஸ்திராதி கல்விகளையும் தந்து சண்முகக் கடவுளுடைய பாதாரவிந்த அருட் செல்வத்தையும் கொடுக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 3 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம், முனி தீர்த்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கல்வெட்டுகளிலும் சண்முகர் என்று முருகனை குறிப்பிடவில்லை. இந்த கல்வெட்டில் தான் முருகனை குறிப்பிட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்வெட்டு சத்திய தீர்த்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முருகனை வணங்குபவர்களுக்கு நிச்சயம் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது இந்த கல்வெட்டு. தற்போது கடலில் இருந்து திருப்பி மட்டும் போடப்பட்டுள்ள இந்த கல்வெட்டு மீண்டும் கடல் அலையில் சிக்கி சேதமடையும் முன்பு கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications