பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்
தூத்துக்குடி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஜனநாயகன் படம் பிரச்சனைக்கு குரல் கொடுக்காதவர் ஜனநாயக ஆட்சியை எப்படி வழங்குவார் என்று தவெக தலைவர் விஜய் குறித்து திமுக அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "நான் 1996 ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறேன். வருகிற ஆகஸ்ட் மாதம் வந்தால் 30 வருடங்களாகிறது. திமுக தொடங்கி 75 வருடங்களாகிவிட்டன. சிலர் ஒரு வருடத்திற்கு முன்பு கட்சி தொடங்கிவிட்டு நான் தான் முதலமைச்சர். நான் தான் முதலமைச்சர் என்று சொல்கிறார்கள். ஆனால் பாஜக என்ற வார்த்தையை சொல்ல பயந்து சாகிறார். பாஜக என்கிற வார்த்தையை சொல்ல மாட்டார்கள்.

பாஜக என்றால் பயம்
கரூரில் அவரைப் பார்ப்பதற்கு வந்து இறந்த 41 பேரின் வீட்டிற்கு சென்று கூட ஆறுதல் சொல்லவில்லை. ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறார்கள். அன்றைக்கோ அல்லது அடுத்த நாளோ சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்வோம். வண்டியை வைத்து பாதிக்கப்பட்டவர்கள் இவரை சந்திக்க வரவழைக்கிறார். இவர் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். அவரின் மனைவி, மகள், மகன் நிலை எப்படி இருக்கிறது.
தான் பிரச்சனைக்கு கூட அவர் வாய்திறக்கவில்லை. ஜனநாயகன் படம் வெளியீட்டில் உள்ள பிரச்சனைக்கு கூட அவர் குரல் கொடுக்கவில்லை. அவர் எப்படி ஜனநாயக ஆட்சி நடத்த போகிறார். தமிழ்நாட்டிற்கு பாஜக அவ்வளவு நெருக்கடிகளை கொடுக்கிறது. அதற்கு ஏதாவது குரல் கொடுத்தாரா. பாஜக அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது. அதைப்பற்றி கேட்டாரா. ஏன் பாஜக என்றால் பயம்.
மக்கள் நலன் சார்ந்த கூட்டணி
இங்குள்ள முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சி எல்லாம் நூற்றாண்டு பார்த்த கட்சிகள். காலம் காலமாக மக்கள் நலனுக்காக திட்டமிட்டு செயல்படும் கட்சிகள். இன்றைக்கு வந்தவர்கள் எல்லாம் நாங்கள் தான் முதலமைச்சர் என்று அவர்களுக்கு அவர்களே கோஷம் போடுகிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணி அப்படி அல்ல. நாங்கள் மக்கள் நலன் சார்ந்தே வாழ்பவர்கள். எங்களிடம் குறைகள் இருந்தாலும் கூட்டணி கட்சிகள் சுட்டி காட்டுவார்கள்.
விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைவருமே மக்கள் நலம் விரும்பிகள். எங்களுக்கு நல்ல ஆலோசகர்கள். கொரோனா, வெள்ளம் என எந்த காலமாக இருந்தாலும் களத்தில் இருப்பார்கள். மக்களுக்காக தன்னலம் பாராமல் சேவை செய்வார்கள். யார் நம்முடன் இருந்து சேவை செய்வார்கள். களத்தில் யார் வந்தாலும் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும்" என்றார்.
-
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.. நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு.. திருப்பூரில் விஜய் வாக்குறுதிகள் -
ரோடு ஷோவை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு கோவை திரும்பிய விஜய்.. தவெக தொண்டர்கள் கடும் ஏமாற்றம் -
இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே? -
விஜய் அவரது குழந்தையை கைவிடமாட்டார்.. திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க ஆதவ் அர்ஜுனா ஐடியா -
காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல! -
தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள் -
விஜய்யை பார்க்க வீட்டில் சொல்லாம கொள்ளாம வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 5 பவுன் செயின் திருட்டு! -
கரூர் கூட்ட நெரிசலில் ஒரே மாதத்தில் பறி போன இரு உயிர்கள்! விரைவில் வெளியாகும் கள அறிக்கை? -
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய் -
திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே!












Click it and Unblock the Notifications