திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம்.. விண்ணதிர எழுந்த அரோகரா கோஷம்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்திலும் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். மார்ச் 2 ஆம் தேதியான இன்று தேரோட்​டம் நடை​பெற்று வருகிறது.

tiruchendur chariot festival

இன்று காலை 7.30 மணிக்கு விநாயகர், சுவாமி, தெய்​வானை அம்​பாள் ஆகியோர் தனித்​தனி தேர்​களில் ரத வீதி​யில் வலம் வந்து அருள் பாலித்து வருகின்றனர். தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் இழுக்கும்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷத்தால் திருச்செந்தூரே அதிர்ந்தது. மாசித் திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை மார்ச் 3 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்​சவம் நடை​பெறுகிறது. மார்ச் 4 ஆம் தேதி மாசித் திரு​விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் தக்​கார் ரா.அருள்​முரு​கன், இணை ஆணை​யர் க.ராமு மற்​றும் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+