இரக்கமில்லை.. சுவாசிக்க காற்று கேட்டவர்களின் மூச்சையே பறித்து நாள்.. உருக்கமாக டிவிட் செய்த கமல்!
தூத்துக்குடி: சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து சொந்த மக்களை அரசு சுட்டுக்கொன்ற தினம் இன்று என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் நினைவு நாள் குறித்து டிவிட் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு நடந்த போராட்டத்தில் கடந்த இரண்டு வருடம் முன் துப்பாக்கி சூடு நடைபெற்றது. அமைதியாக நடந்த போராட்டத்தில் திடீர் என்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. நூறாவது நாள் போராட்டத்தில் கடந்த வருடம் இதே நாளில், மக்கள் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி சென்றனர்.

அப்போது மக்கள் மீது தூத்துக்குடி போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்திய மக்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இது தொடர்பாக தற்போது டிவிட் செய்துள்ளார். அதில், மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று.
சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது, என்று உருக்கமாக கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார் .
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications