தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் களமிறங்கும் கனிமொழி! முறைப்படி இன்று விருப்பமனுத் தாக்கல்!
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார் கனிமொழி எம்.பி.
கனிமொழிக்கு மீண்டும் சீட் உறுதி என்பதால் இப்போதே தூத்துக்குடியில் தேர்தல் களம் களைக்கட்டிவிட்டது. கனிமொழியை எதிர்த்து அதிமுக, பாஜக சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறிவருகிறது.

திமுக வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனு படிவம் விநியோகம் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் மார்ச் 1 முதல் 7ஆம் தேதி மாலை 6 மணிக்குள் திமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் இன்று வரை திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர்.
அந்த வகையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கேட்டு கனிமொழி எம்.பி. விருப்பமனு தாக்கல் செய்தார். ஏற்கனவே கனிமொழி பெயரில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 50க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை அவரது ஆதரவாளர்கள் அளித்திருந்தனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரும் கனிமொழி பெயரில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் ஏற்கனவே விருப்ப மனு கொடுத்திருந்தனர்.
நேற்று நவமி, இன்று செவ்வாய்கிழமை என்பதால் பலரும் விருப்பமனு கொடுக்க முன்வரவில்லை. நாளையும், நாளை மறுநாளும் இன்னும் நூற்றக்கணக்கானோர் எம்.பி.சீட் கேட்டு விருப்பமனு அளிக்க முன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அமைச்சர் நேரு மகன் பெரம்பலூர், திருச்சி தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதிக்கும், தருமபுரி தொகுதியில் போட்டியிட பழனியப்பனும் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
நாளை மறுநாளுடன் விருப்பமனு கொடுக்கும் தேதி முடிவடைவதால் நாளையும், நாளை மறுநாளும் அதிக எண்ணிக்கையில் விருப்பமனுக்கள் குவியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 10ஆம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் தொடங்கிவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications