ஊழல் பற்றி தி.மு.க. பேசலாமா?... தமிழிசை சரமாரி கேள்வி
தூத்துக்குடி: வேலூர் சோதனையில் பணம் சிக்கிய நிலையில், ஊழல் பற்றி தி.மு.க. பேசலாமா? என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், காமராஜர் சந்தை பகுதியில் வாக்கு சேகரித்தார்.
காய்கறி சந்தைக்கு அருகே, துப்புரவு பணியாளர்களுடன் பணிபுரிந்து விட்டு, தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்தார் தமிழிசை. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊழல் குற்றச்சாட்டு
அதன்படி, தூத்துக்குடிக்கு பல திட்டங்களை கொண்டு வந்து மேம்படுத்த உள்ளதாக தெரிவித்தார். வேலூர் சோதனையில் பணம் சிக்கிய நிலையில், ஊழல் பற்றி தி.மு.க. பேசலாமா? எனவும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை
மேலும், தனக்கு ஒரு முறை கூட ராஜ்யசபா எம்.பி ஆகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தற்போது தான், தூத்துக்குடி மக்கள் தன்னை பார்லிமென்ட் அனுப்பி வைக்க உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

வாரிசு அடிப்படையில் எம்.பி
வாரிசு என்ற அடிப்படையில் இரண்டு முறை ராஜ்யசபா எம்.பியாக இருந்து கொண்டிருக்கும் நீங்கள் (கனிமொழி), தமிழ்நாடு பிரச்சினைகளை, தூத்துக்குடி பிரச்சனையை எத்தனை முறை எழுப்பி உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்

கனிமொழி நாடகம்
தமிழிசை இரக்கம் இல்லாதவள் என்று பேசுகிறார்கள்; நான் கேட்பதற்கு நீங்கள் (கனிமொழி) பதில் சொல்லுங்கள் என்றும், ஈழத்தில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். அப்போது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்காமல், கட்சி தலைவர் என்ற முறையில் சொந்த அப்பாவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து ஒருநாள்கூட ராஜினாமா செய்யாமல் கனிமொழி நாடகமாடியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications