தமிழிசையின் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்பு… ஆனா.. அமமுக வேட்பாளர்கள்
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வேட்பு மனு மீதான பரிசீலனை நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கௌரவ இயக்குநராக இருப்பதை குறிப்பிடப்படவில்லை என திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்கு குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு
இதேபோல், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் கனிமொழி வேட்பு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவரின் மனுவையும் தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்
இதற்கிடையே, அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வரும் வரை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் காத்திருக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications