எல்லாத்துக்கும் காரணம் அதிமுகதான்.. மன்னிக்கவே கூடாது.. கனிமொழி தாக்கு

அதிமுக, பாஜக அரசு மீது கனிமொழி எம்பி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் அதிமுகதான்.. அவர்களை மன்னிக்கவே கூடாது என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே திமுக சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது வல்லநாட்டில் நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் பேசியபோது அவர் சொன்னதாவது:

MP Kanimozhi slams ADMK

உள்ளாட்சி தேர்தலை நடத்தினாலே, தமிழகத்தில் தண்ணீ ர் பிரச்சனை தீர்ந்து விடும். இந்த ஊரில் மாணவன் ஒருவன் ஆண்கள் பயன்படுத்த பள்ளியில் கழிவறை இல்லை என ஆதங்கத்துடன் கூறினார்

அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், அதேபோல, பொங்கல் விளையாட்டு விளையாட திடல் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். மத்திய அரசுக்கு தமிழக அரசு காவடி தூக்கி வருகிறது.

நம் மாநிலத்தில் எந்த பிரச்சனையை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள், நீட் பிரச்சனையாகட்டும், ஸ்டெர்லைட் பிரச்சனையாகட்டும், இதற்கெல்லாம் காரணம் அதிமுகதான். அவர்களை மன்னிக்கவே கூடாது.

18 சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எல்லா பிரச்சனைகளும் அப்போது தீர்க்கப்பட்டு விடும். எங்கள் கூட்டணி ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டி பிரச்சனையும் தீரும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+