3 அமைச்சர்கள் இருக்கும்போதே முதல் வரிசையில் அமர்ந்து ‘கொர்ர்ர்’ - தூங்கி விழுந்த மூத்த அதிகாரிகள்!
தூத்துக்குடி: தி.மு.க அமைச்சர்கள் 3 பேர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் ஒருசில அதிகாரிகள் தூங்கி வழிந்தனர்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தினை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்தாய்வு மேற்கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை கட்டிட செயற்பொறியாளர் மற்றும் பின்வரிசையில் அமர்ந்திருந்த மற்றுமொரு அதிகாரி உள்ளிட்டோர் அமைச்சர்கள் முன்னிலையில் முன்வரிசையில் அமர்ந்து தூங்கி வழிந்தனர்.
மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அதிகாரிகள் அசந்து போய் தூங்கி வழிந்தது பற்றி அங்கிருந்த மற்ற அதிகாரிகள் கமெண்ட் அடித்துள்ளனர்.